களியாட்ட விடுதி மோதல்: யோஷிதவுடன் சென்ற மூவர் குற்றப்புலனாய்வு பிரிவில் சரண்
கொழும்பில்(Colombo) உள்ள இரவு விடுதி ஒன்றின் இரவு நேர களியாட்ட விடுதியில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவுடன் (Yoshitha Rajapaksa ) சென்ற மூவர் கொழும்பு மத்திய குற்றப்புலனாய்வு பிரிவில் சரணடைந்துள்ளனர்.
கொம்பனி தெரு பகுதியில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதியில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
இந்த சம்பவம் கடந்த மார்ச் 22 ஆம் திகதி இரவு நடந்ததாகவும், அதில் ஒரு பாதுகாப்பு அதிகாரி தாக்கப்பட்டு காயமடைந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மூன்று சந்தேக நபர்கள்
அத்துடன், காயமடைந்த பாதுகாப்பு அதிகாரி தற்போது கொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவுடன் சென்ற மூவர் சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி, அவர்களைக் கைது செய்ய பல காவல்துறைக் குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த நபர்கள் கொழும்பு மத்திய குற்றப்புலனாய்வு பிரிவில் சரணடைந்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 3 நாட்கள் முன்
