இதுவே இறுதி சந்தர்ப்பம்! யாழ். அபிவிருத்திக் குழு கூட்டத்தில் சந்திரசேகர் திட்டவட்டம்
இதுவரைகாலமும், யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் பேசப்பட்டது குறைவு என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்
மேலும், குழு கூட்டத்தில் தேவையற்ற விடயங்கள் பேசப்பட்டதே அதிகம் என்றும், இப்படியான கூட்டம் இதுவே இறுதியாக இருக்க வேண்டும் எனவும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர்,
[FNH9G3X ]
அபிவிருத்திக் குழு கூட்டத்தில்
இதுவரை காலமும், மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் முன்மொழியப்பட்ட விடயங்களை பற்றி போசிய சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவாகவே காணப்படுகிறன.
இதுவரை காலமும் அவதானித்ததன்படி குறிப்பிட்ட சில விடயங்கள் மட்டுமே மீண்டும் மீண்டும் பேசப்பட்டு வருகிறன.
மேலும், இங்குள்ள அரச அதிகாரிகள் ஊடாகவே நாம் மக்களுக்கான சேவையை வழங்கமுடியும், அவ்வாறிருக்கையில் அந்த அதிகாரிகளை சுட்டிக்காட்டி தரக்குரைவாக பேசுவது நியாயமற்றது.
அதற்கமைய இனிவரும் காலங்களில் இப்படியான விடயங்கள பேசுவதை தவிர்க்கவேண்டும்.” என்றார்.

