பாணுக்கான விலையை குறைக்காவிட்டால் : விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை
அடுத்த வாரம் முதல் 450 கிராம் பாணின் விலை 130 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படாவிட்டால், அதற்கான கட்டுப்பாட்டு விலையை கொண்டுவர வேண்டியிருக்கும் என நுகர்வோர் சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி ஒரு கடைக்கு 1 இலட்சம் ரூபாவும், ஒரு நிறுவனம் அல்லது கம்பனிக்கு 5 இலட்சம் முதல் 50 இலட்சம் ரூபாவும் அபராதம் விதிக்க முடியும் என சோதனைகள் மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சஞ்சய் இராசிங்க தெரிவித்தார்.
பாணுக்கு நிலையான விலை
பாணுக்கு நிலையான விலை இல்லை என்றும் குறிப்பிட்ட நிலையான எடை இல்லை என்றும் நுகர்வோர் உள்ளிட்ட தரப்பினர் அவ்வப்போது குற்றம் சாட்டி வந்தனர்.

அதன்படி, வாடிக்கையாளர் சேவை அதிகார சபை இது தொடர்பாக அவ்வப்போது சோதனை நடத்தியது.
இவ்வாறானதொரு பின்னணியில், பெப்ரவரி 02ஆம் திகதி, நுகர்வோர் விவகார அதிகார சபையினால் நிர்ணயிக்கப்பட்ட பாணின் எடை தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.
பாணின் குறைந்தபட்ச எடை
ஒரு பாணின் குறைந்தபட்ச எடை 450 கிராம் மற்றும் அரை இறாத்தல் பாணின் குறைந்தபட்ச எடை 225 கிராம் இருக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி சங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |