அமெரிக்காவை உலுக்கிய கோர விபத்து! உயிரிழப்புத் தொடர்பில் வெளியான அறிவிப்பு
அமெரிக்க மாநிலமான உட்டாவில் அமைந்துள்ள நெடுஞ்சாலையொன்றில் சுமார் 20 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதனால் குறைந்தது 7 பேர் உயிரிழந்துள்ளதாக நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு தெரிவித்துள்ளது. கனோஷ் நகருக்கு அருகே உள்ள இன்டர்ஸ்டேட் 15 இல் இந்த விபத்துக்கள் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. விபத்துக்குள்ளானவர்களைக் கொண்டு செல்ல அம்பியூலன்ஸ்களும், ஹெலிகொப்டர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த நெடுஞ்சாலை பகுதியில் அதிக காற்றினால் உண்டான மணல் புயல் காரணமாகவே இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட அறிக்கைகளில் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் நெடுஞ்சாலை ஞாயிற்றுக்கிழமை தாமதமாக மூடப்பட்டது. விபத்து நடந்த இடத்தை சுற்றி போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.