அத்துமீறி மீன்பிடி : இந்திய கடற்றொழிலாளர்களுக்கு நீதிமன்றின் உத்தரவு
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 30 ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (9) மாலை உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் ராமேஸ்வரம் பாம்பன் பகுதிகளை சேர்ந்த 30 கடற்றொழிலாளர்கள் நெடுந்தீவுக் கடற்பரப்பில் 4 படகில் மீன்பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த நிலையில் கடற்படையினரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட 30 கடற்றொழிலாளர்கள்
கைது செய்யப்பட்ட 30 கடற்றொழிலாளர்கள் கடற்படையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் இன்று வியாழக்கிழமை (9) காலை மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வள துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு , திணைக்கள அதிகாரிகள் பதிவு நடவடிக்கைகளுக்கு பின்னர் இன்று (9) மாலை மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.
கடற்றொழிலாளர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு மன்னார் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர் . வழக்கை விசாரித்த மன்னார் நீதவான் குறித்த கடற்றொழிலாளர்களை எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

