இரண்டு முன்னாள் அமைச்சர்கள் மீது பாயப்போகும் சட்டம்
தவறான தகவல்களைப் பரப்பியதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர(dayasiri jayasekara) மற்றும் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில(udaya gammanpila) ஆகியோர் விரைவில் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் இதற்காக அவர்கள் இருவரும் குற்றப் புலனாய்வுத்துறையால் அழைக்கப்படுவார்கள் என்றும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார (harshana nanayakkara)இன்று(04) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
"வடமத்திய மாகாணத்தின் வாகன விற்பனை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி தவறான தகவல்களைக் கூறினார். பின்னர் வடமத்திய மாகாண ஆளுநர் சட்ட நடவடிக்கை எடுப்பதாக மிரட்டியபோது அவர் மன்னிப்பு கேட்டார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது," என்று அமைச்சர் கூறினார்.
தயாசிறியின் செயல் வாழைக்குலை திருட்டு போன்றது
"எம்.பி.யின் செயல், வாழைப்பழக் குலையைத் திருடி, அதைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, உரிமையாளரிடம் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கேட்பது போன்றது" என்ற நீதி அமைச்சர், தயாசிறி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுட்டிக்காட்டினார்.
விரைவில் சிஐடிக்கு அழைக்கப்படவுள்ள கம்மன்பில
கொள்கலன்களை அகற்றுவது தொடர்பாக கம்மன்பிலவுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் விரைவில் சிஐடியால் அவர் அழைக்கப்படுவார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
