சொகுசு வர்த்தக மையங்களாக மாறப்போகும் தொடருந்து நிலையங்கள்
Sri Lankan Peoples
Sri Lanka Railways
By Dhilak
கொழும்பு புறநகர் பகுதிகளுக்கு அருகில் உள்ள ஐந்து தொடருந்து நிலையங்களை சொகுசு வர்த்தக நிலையங்களாக அபிவிருத்தி செய்ய புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான அறிக்கை போக்குவரத்து அமைச்சக செயலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதேவேளை, குறித்த திட்டத்திற்கு போக்குவரத்து அமைச்சகமும் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு
அதன்படி, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, தெஹிவளை மற்றும் மவுண்ட் தொடருந்து நிலையங்கள் சொகுசு வர்த்தக நிலையங்களாக அபிவிருத்தி செய்யப்பட உள்ளன.

'ஸ்டேஷன் பிளாசா' என்று பெயரிடப்பட்டுள்ள திட்டத்தில் தொடருந்து நிலையங்களில் அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |