பெண் மருத்துவர் வன்கொடுமை :முன்னாள் இராணுவ வீரருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அனுராதபுரம்(anuradhapura) போதனா வைத்தியசாலையில் பயிற்சி பெற்ற சிறப்பு மருத்துவரை வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ வீரரை டி.என்.ஏ. பரிசோதனைக்காக முற்படுத்தி, தொடர்புடைய மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அனுராதபுரம் தலைமையக காவல்துறைக்கு அனுராதபுரம் தலைமை நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய இன்று(10) உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று அனுராதபுரம் தலைமை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்தார்.
காவல்துறையினர் தெரிவித்த விடயம்
பெண் மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக காவல்துறையினர் நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர்.
விளக்கமறியலில் வைக்க உத்தரவு
எனவே, சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு காவல்துறையினர் நீதிமன்றத்தை கோரியுள்ளனர்.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தலைமை நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய, சந்தேகநபரான முன்னாள் இராணுவ வீரரை இம்மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
