மோசடிகாரர்களிடம் ஏமாற வேண்டாம் - நாட்டு மக்களுக்கு வெளியாகிய எச்சரிக்கை..!

Sri Lanka Sri Lankan Peoples
By Kiruththikan May 22, 2023 01:43 PM GMT
Report

வெளிநாட்டு கடவுச்சீட்டு மோசடிகளை தடுக்க உரிய நடவடிக்கைகள் திணைக்கள மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் மாதம் முதல் நாடளாவிய ரீதியில் உள்ள 50 பிரதேச செயலக பிரிவுகள் ஊடாக கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

ஆகவே, கடவுச்சீட்டுக்காக இடைத்தரகர்கள், மோசடியாளர்களிடம் ஏமாற வேண்டாம் என குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிடிய பொது மக்களிடம் வலியுறுத்தினார்.

வெளிநாட்டு கடவுச்சீட்டு

மோசடிகாரர்களிடம் ஏமாற வேண்டாம் - நாட்டு மக்களுக்கு வெளியாகிய எச்சரிக்கை..! | Dont Be Fooled By Scammers Sri Lanka

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது, நாட்டில் பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்த பின்னணியில் வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கான கேள்வி அதிகமாக காணப்பட்டது.

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் மனித மற்றும் பௌதீக வளங்களை கருத்திற்கொண்டு கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்கு நேரம் மற்றும் காலத்தை ஒதுக்கிக்கொள்ள இணையவழி முறைமை ஊடான வழிமுறை கடந்த ஆண்டு இறுதிப் பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகத்துக்கான இணையவழி முறைமை ஊடான விண்ணப்பம் சமர்ப்பிப்பு கடந்த 17ஆம் திகதியுடன் இரத்து செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள திணைக்களத்துக்கு வருகை தரும் பொது மக்களின் விண்ணப்பங்கள் டோக்கன் முறையில் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், வழமையான தன்மை பின்பற்றப்பட்டது.

வரிசையில் நிற்காமல் கடவுச்சீட்டுக்களை பெற்றுத் தருவதாக குறிப்பிட்டு ஒரு தரப்பினர் நிதி மோசடியில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த முறைகேடான செயற்பாட்டுடன் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தொடர்புகொண்டுள்ளதாக அறிய முடிந்தது. அவருக்கு எதிராக திணைக்கள மட்டத்தில் விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வரிசையில் இருக்காமல் கடவுச்சீட்டு பெற்றுத் தருவதாக குறிப்பிட்டு நிதி மோசடி செய்த 16 பேர் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் வளாகத்தில் இருந்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

பொதுமக்கள் இலகுவான முறையில் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ளும் வகையிலான வசதிகள் எதிர்வரும் மாதம் முதலாம் திகதி முதல் விரிவுபடுத்தப்படும்.

இதற்கமைய முதற்கட்டமாக 50 பிரதேச செயலகங்களில் அதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கும் நபர் இணைய வழி முறைமை ஊடாக கடவுச்சீட்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அதனை குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்துக்கு சமர்ப்பித்துவிட்டு புகைப்படம், கைரேகை பதிவுகளை பிரதேச செயலக பிரிவுகள் ஊடாக சமர்ப்பிக்க வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

இதற்காக பிரதேச செயகல பிரிவுகளில் விசேட கருமபீடங்கள் அமைக்கப்படும். முழுமையாக விண்ணப்பங்களை சமர்ப்பித்ததன் பின்னர் மூன்று நாட்களுக்குள் பதிவுத் தபால் ஊடாக வீட்டுக்கே கடவுச்சீட்டு அனுப்பி வைக்கப்படும்.

சாதாரண சேவை உட்பட ஒருநாள் சேவை ஆகியவற்றை இவ்வாறு தொடர தீர்மானித்துள்ளோம். இதன் பின்னர் எவரும் பத்தரமுல்ல தலைமை காரியாலயத்துக்கு வருகை தரவேண்டிய அவசியம் இருக்காது.

இந்த ஆண்டுக்குள் இலத்திரனியல் கடவுச்சீட்டு முறைமையை அறிமுகப்படுத்த அமைச்சரவை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச மனித வளம் மற்றும் பௌதீக வளங்களை கொண்டு திணைக்களம் செயற்படுகிறது.

ஒரு நாள் கடவுச்சீட்டுக்கான கேள்வி அதிகமாக காணப்படுகின்றது. கடந்த 18ஆம் திகதி 1995 கடவுச்சீட்டுக்களும், 19ஆம் திகதி 1750 கடவுச்சீட்டுக்களும், இன்று 1500 கடவுச்சீட்டுக்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன. இலகுவான முறையில் கடவுச்சீட்டுக்களை பெற்றுத் தருவதாக குறிப்பிட்டுக்கொண்டு ஒரு தரப்பினர் பொது மக்களை ஏமாற்றுகிறார்கள்.

அவர்கள் அதை தொழிலாக செய்கிறார்கள். ஆகவே, கடவுச்சீட்டுகளுக்காக இடைத்தரகர்கள், மோசடியாளர்களிடம் ஏமாற்றமடைவதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019