நெருக்கடியில் நாடு -டொலர்களை கண்டுபிடிக்கும் வழியை கூறும் மருத்துவ நிபுணர்
டொலர்களை கண்டுபிடிக்கும் யோசனை
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நாட்டை மீட்கும் வகையில் டொலர்களை கண்டுபிடிக்கும் யோசனையொன்றை கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளார்.
இதன்படி வெளிநாட்டில் உள்ள சிறுவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தனியான விடுதி ஒன்றை உருவாக்குவதே டொலரைக் கண்டுபிடிப்பதற்கான சிறந்த வழியாகும் என வைத்திய நிபுணர் குறிப்பிட்டார்.
வெளிநாட்டில் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை
இதற்கு மேலதிகமாக கட்டுநாயக்க விமான நிலையத்தை சூழவுள்ள பிரதேசத்தில் வெளிநாட்டில் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனியான வைத்தியசாலையை உருவாக்குவது அல்லது நாட்டில் உள்ள ஏனைய வைத்தியசாலைகளில் தனியான விடுதிகள் மற்றும் வசதிகளை ஏற்படுத்துவது டொலரை கண்டுபிடிக்க வழி வகுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதை தடுத்தல்
மருத்துவம் மற்றும் ஏனைய கல்வி நடவடிக்கைகளுக்காக மாணவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதை தடுக்க நடவடிக்கை எடுப்பதன் மூலம் நாட்டில் டொலர்களை மிச்சப்படுத்த முடியும் என தெரிவித்த தீபால் பெரேரா, இலங்கையில் உயர் கல்வி நடவடிக்கைகளுக்கு வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதே இதற்கு தீர்வாக அமையும் எனவும் சுட்டிக்காட்டினார்.
வெளிநாட்டு மாணவர்களுக்கு இலங்கையில் பல்கலைக்கழகங்கள்
இது தவிர வெளிநாட்டு மாணவர்களுக்காக இலங்கையில் பல்கலைக்கழகங்களை ஆரம்பிப்பதன் மூலமோ அல்லது உள்ளூர் பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்களுக்கென தனியான துறைகளை நிறுவுவதன் மூலமோ பெரும் தொகை டொலர்களை சம்பாதிக்க முடியும் என வைத்திய நிபுணர் தெரிவித்தார்.
இந்த நாட்டில் தேவையான சில மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்ய தொழில்முனைவோரை ஊக்குவிப்பது டாலர்களை சேமிப்பதற்கான மற்றொரு சிறந்த வழியாகும் என்று அவர் கூறினார்.