பேருந்தைச் செலுத்தியவாறே உயிரிழந்த சாரதி: நுவரெலியாவில் துயரம்!
நுவரெலியாவில் (Nuwara Eliya) இருந்து நாவலப்பிட்டி (Nawalapitiya) நோக்கிப் பயணித்த நாவலப்பிட்டி டிப்போவிற்கு சொந்தமான பேருந்தின் சாரதி ஆசனத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த சாரதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
41 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஆரத்தனகே என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மாரடைப்பினால் அவதி
நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பு நிலையத்திலிருந்து நேற்று மாலை 03.10 மணியலவில் புறப்பட்டு தலவாக்கலை ஊடாக பத்தனை சந்தி வழியாக நாவலப்பிட்டி நோக்கி பயணித்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் லிந்துலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட மட்டுக்கலை சந்தியை அண்மித்த பகுதியில் தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாக குறித்த சாரதி பேருந்தை வீதி ஓரத்தில் நிறுத்தியுள்ளார்.
இதேவேளை பேருந்தின் நடத்துநர் சாரதி அருகே ஓடிவந்து நிலைமையை ஆராய்ந்த போது சாரதி மாரடைப்பினால் அவதியுற்றதாக காவல்துறையினரின் விசாரணையில் குறிப்பிட்டுள்ளார்.
காவல்துறையினர் தெரிவிப்பு
உடனடியாக மற்றுமொரு வாகனம் ஒன்றில் சாரதியை ஏற்றி அருகில் உள்ள லிந்துலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளையில் சாரதி உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து சாரதியின் உடல் பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக லிந்துலை காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
இவ்வாறான நிலையில் குறித்த சாரதி பேருந்தை நிறுத்தி இருக்காவிட்டால் பாரிய அசம்பாவிதம் ஏற்பட்டிருக்ககூடும் என அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 4 நாட்கள் முன்
