வடக்கில் போதைப்பொருள் பாவனை திடீர் அதிகரிப்பு - கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகள்..! பிரதமர் தகவல்
வடக்கு மாகாணத்தில் ஹெரோயின் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவைத்துள்ளார்.
திடீர் அதிகரிப்பு
தொடர்ந்து கருத்துரைத்த அவர்," வடக்கு மாகாணத்தில் ஹெரோயின் போதைப்பொருள் பாவனை திடீரென அதிகரித்தமை மிகவும் கவலையளிக்கின்றது.
நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் விற்பனையாளர்களையும், பாதாள உலகக் குழுவினரையும் தேடிக்கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் காவல்துறையினர், விசேட அதிரடிப் படையினர் மற்றும் முப்படையினர் களமிறங்கியுள்ளனர்
வடக்கில் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்பவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும்.
முதலில் போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால்தான் போதைப்பொருள் பாவனையை முடிவுக்குக் கொண்டுவர முடியும்” எனக் குறிப்பிட்டார்.