இந்தியாவில் குஜராத்தில் தொடர் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்
Gujarat
India
Earthquake
World
By Thulsi
இந்தியா (india) - குஜராத் மாநிலத்தில் கட்ச் மாவட்டத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலநடுக்கம் கட்ச் மாவட்டத்தில் காலை (23/9/2024) 10.05 மணியளவில் பதிவான நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 3.3 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.
இதுதொடர்பாக நில அதிர்வு ஆராய்ச்சி நிறுவனம் கூறுகையில்,
பொதுமக்கள் அச்சம்
அதன் மையம் ராபாருக்கு தென்மேற்கில் 12 கிமீ தொலைவில் அமைந்துள்ளதாக காந்தி நகரை தளமாகக் கொண்ட ஐஎஸ்ஆர் தெரிவித்துள்ளது.
இந்த மாதத்தில் மாநிலத்தின் சௌராஷ்டிரா-கட்ச் பகுதியில் 3 ரிக்டர்களுக்கு மேல் பதிவான நான்காவது நிலநடுக்கம் இதுவாகும்.
நில நடுக்கத்தால் வீடுகள் லேசாக குலுங்கியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஆனால் உயிர் சேதமோ, பொருட் சேதமோ எதுவும் ஏற்படவில்லை.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்