ஜேவிபி போன்ற கட்சிகளால் பொருளாதார வளர்ச்சி சாத்தியமில்லை : ரணில் பகிரங்கம்
மக்கள் விடுதலை முன்னனி (Janatha Vimukthi Peramuna) போன்ற கட்சிகளின் சித்தாந்தங்களினால் நாடு விரைவான பொருளாதார வளர்ச்சியை அடைய முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil wickremesinghe) தெரிவித்துள்ளார்.
சமூகவலைத்தளங்களில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் “ரணிலிடம் கேளுங்கள்” (Ask Ranil ) நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, “யாராலும் தீர்க்க முடியாது என்று கூறிய பொருளாதார நெருக்கடியை தீர்த்து வைப்பதில் வெற்றி பெற்றுள்ளோம்.
நெருக்கடிக்கு தீர்வு
சரியான பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தாமல் இந்த வேலைத்திட்டத்தை பாதியில் நிறுத்தினால், நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும்.

நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு கட்சி பேதமின்றி புதிதாக சிந்தித்து புதிய வேலைத்திட்டத்திற்கு செல்ல வேண்டும்.
நாட்டின் பொருளாதாரத்தில் புதிய மாற்றம் ஏற்பட வேண்டும், ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கி செல்லாவிட்டால் நாடு மீண்டும் வீழ்ச்சி அடையும்.
எனவே அடுத்த இருபது வருடங்கள் குறித்து சிந்தித்து முடிவெடுக்குமாறு இளைஞர்களை கேட்டுக் கொள்கிறேன்“ என ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
2 நாட்கள் முன்