சஜித் -அனுரவின் பொருளாதாரக் கொள்கைகளை குற்றஞ்சாட்டும் ஆளும் கட்சி எம்.பி
சஜித் (Sajith Premadasa), அனுர (Anurakumara Dissanayaka) போன்றவர்களின் பொருளாதாரக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்படும்போது சாமானிய மக்களுக்கு சாப்பிடக் கூட நேரமில்லாமல் போகும் என அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
உடுகம்பொல பிரதேசத்தில் நேற்று (27) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “எமது நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு ஜனாதிபதி பகிரங்க அழைப்பு விடுத்தார்.
பொருளாதாரக் கொள்கைகள்
இருவருமே கதைப்பதில் வல்லவர்கள். எனவே குதித்து இந்த சவாலை ஏற்றுக்கொள்வார்கள் என்று நாங்கள் நினைத்தோம். எதிர்க்கட்சித் தலைவர் மிகவும் யோசித்து அந்த சவாலை ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஆனால் அவர் ஜனாதிபதி வேட்பாளராக இந்த விவாதத்திற்கு வருவாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
ஒவ்வொரு முச்சந்தியிலும் நடைபாதையிலும் உண்மை விளம்பியபடி இருக்கும் அனுர குமார திஸாநாயக்க விடமிருந்து இன்னும் எந்த சலனமும் இல்லை. சஜித், அனுர போன்றவர்களின் பொருளாதாரக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்படும்போது சாமானிய மக்களுக்கு சாப்பிடக் கூட நேரமில்லாமல் போகும்.
அவை இவ்வுலகில் நடைமுறைப்படுத்தக் கூடிய கொள்கைகள் அல்ல. அனுரவும் சஜித்தும் பழைய ஆட்கள். அதனால்தான் அனுரவின் அரசாங்கத்தின் நிதியமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி எலோன் மாஸ்க்கை போன்ற பொருளாதாரக் கொலையாளி என அழைக்கப்படுகிறார்.
சஜித் பிரேமதாச ஜனாதிபதியானால் மலையக மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சி! இராதாகிருஷ்ணன் எம்.பி சுட்டிக்காட்டு
நாட்டின் பொருளாதாரம்
உலகமே தெரியாத இந்த மாதிரி ஆட்களை வைத்து எப்படி நாட்டை கட்டியெழுப்ப முடியும்? ஒரு நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது எப்படி? ஜே.வி.பி (JVP) 88/89 காலப் பகுதியில் பேரூந்துகள் எரிக்கப்பட்டன, மின்மாற்றிகள் எரிக்கப்பட்டன, வங்கிகள் உடைக்கப்பட்டு அரசாங்க சொத்துக்கள் அழிக்கப்பட்டன.

நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டிய பணத்தில் அவற்றை மீளக் கட்டியெழுப்ப செலவு செய்ய வேண்டியிருந்தது. எனவே, இந்த பொருளாதார நெருக்கடியில் ஜே.வி.பி.யும் பங்கு வகிக்கிறது.
75 ஆண்டுகால சாபம் பற்றி பேசும் ஜே.வி.பி, அது ஏற்படுத்திய பொருளாதார அழிவு பற்றி பேசவே இல்லை. எது சரி எது தவறு என்பதை எதிர்த்து நிற்க உங்களுக்கு வலுவான முதுகெலும்பு இருக்க வேண்டும்.
சர்வதேச நாணய நிதியம்
ஜே.வி.பிக்கோ அல்லது சஜித்துக்கோ அத்தகைய முதுகெலும்பு இல்லை. அன்று ஜனாதிபதி கோட்டாபயவின் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தில் இணையவிருக்கும் போது, எமது அமைச்சர்கள் சிலர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

எதிர்க் கட்சியினரைப் போன்று IMF பற்றி மக்களுக்குப் பலிகடா ஆக்கினார்கள் நெருக்கடியின் தொடக்கத்திலேயே நாம் சர்வதேச நாணய நிதியத்திற்குச் சென்றிருந்தால், இந்த நாட்டு மக்கள் வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.
இந்தப் பயணம் மிகவும் கடினமானது. ஆனால் இந்த கடினமான பாதையில் நீங்கள் இன்னும் கொஞ்சம் தூரம் சென்றால், உங்கள் குழந்தைக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கும். இந்த பொருளாதாரப் போக்கை மாற்றினால், முன்னைய காலத்தை விட அதிக சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
எனவே, ஜனாதிபதி பயணிக்கும்இந்த கடினமான பொருளாதாரப் பாதையில் இன்னும் சிறிது தூரம் செல்ல உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |