மின்கட்டண உயர்வு : ஊழியர்களுக்கு 50 இலட்சம் ரூபாய் கொடுப்பனவு
2026 ஜனவரி முதல் மார்ச் வரை மின்சார கட்டணங்களை உயர்த்துவதன் மூலம், மின்சார சபையில் இருந்து, தன்னார்வமாக முன்கூட்டியே வெளியேறத் தேர்ந்தெடுக்கும் பணியாளர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்க முடியும் என முன்மொழியப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை (CEB), பொதுப் பயன்பாடுகள் ஒழுங்குமுறை ஆணையகத்திற்கு (PUCSL) இவ்வாறு முன்மொழிந்துள்ளது.
அதன் அடிப்படையில், 11.554 பில்லியன் ரூபாய்களை, குறித்த பணியாளர்களுக்கு வழங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
50 இலட்சம் ரூபாய்
இந்தநிலையில் குறித்த கொடுப்பனவுகள் 2,158 பணியாளர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் சில பணியாளர்கள் 50 இலட்சம் ரூபாய் வரையில் பெற்றுக் கொள்வர் என்றும் மின்சார சபை கூறியுள்ளது.
இதேவேளை இலங்கை மின்சார சபையின் சொத்துக்களை 06 புதிய நிறுவனங்களுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை பெப்ரவரி முதலாம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யுமாறு வலுசக்தி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |