இலங்கை நிலை படு மோசம் - உடன் நாடு திரும்ப வெளிநாடொன்றின் பிரஜைகளுக்கு அழைப்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து, இலங்கையில் பணிபுரியும் பிலிப்பைன்ஸ் நாட்டவர்களை நாடு திரும்புவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு அந்நாட்டின் வெளிவிவகார செயலாளர் தியோடர் லோசின் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இலங்கையில் 581 பிலிப்பைன்ஸ் பிரஜைகள் பல்வேறு சேவைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்களில் எவரும் பிலிப்பைன்ஸ் செல்வதற்கு இதுவரை விண்ணப்பிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
பிலிப்பைன்ஸ் பிரஜைகளுக்கு அழைப்பு
எவ்வாறாயினும், இலங்கையில் பணிபுரியும் பிலிப்பைன்ஸ் மக்கள் தங்கள் நாட்டுக்கு திரும்ப விரும்பினால், எந்த நேரத்திலும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களை தொடர்பு கொள்ளலாம் என்று Sara Lu Areola தெரிவித்துள்ளார்.
இலங்கையிலுள்ள பிலிப்பைன்ஸ் பிரஜைகள் எவரேனும் மீண்டும் தமது நாட்டிற்குச்செல்ல விரும்பினால் +94 114322267, +94 114322268, +94 112307162 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாகவோ philcon.cmb@cotrop.net அல்லது philcon1.cmb@cotrop.net என்ற மின்னஞ்சல் முகவரியின் ஊடாகவோ கொழும்பிலுள்ள பிலிப்பைன்ஸ் கொன்சியூலர் அலுவலகத்தைத் தொடர்புகொள்ளமுடியும்.
அவ்வாறில்லாவிட்டால் +88 01735349427 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலமோ அல்லது dhaka.pe@dfa.gov.ph என்ற மின்னஞ்சல் முகவரியின் மூலமோ டாக்கா நகரிலுள்ள பிலிப்பைன்ஸ் தூதரகத்தை தொடர்புகொள்ளமுடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
