பிரபாகரனின் இருப்பு - ஆதாரங்கள் உள்ளதென்கிறது பாதுகாப்பு அமைச்சு
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்து விட்டதை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்கள் பாதுகாப்பு அமைச்சிடம் இருப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அதிபர் ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்ததை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்கள் நாட்டின் பாதுகாப்பை அடிப்படையாக கொண்டு வெளியிடப்படாமல் இருப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தமைக்கான சாட்சி

வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் மிக நெருக்கமாக செயற்பட்ட கருணா அம்மான், தயா மாஸ்டர் உள்ளிட்டவர்கள் அவர் உயிரிழந்தமைக்கான சாட்சி என அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், இது தொடர்பில் மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டிருக்க தேவையில்லை எனவும் அதனை விட முக்கியத்துவம் செலுத்த வேண்டிய பல்வேறு காரணிகள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, இலங்கையின் நிலைத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்காக சில குழுக்கள் தற்போது திட்டமிட்டு செயற்பட்டு வருவதாக புலனாய்வு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் பிரமித பண்டார தென்னகோன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இவ்வாறான குழுக்கள் தொடர்பில் பாதுகாப்புதுறை மிக உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி 4 மணி நேரம் முன்