இந்திய திரையுலகின் பழம்பெரும் நடிகர் உடல்நலம் தொடர்பில் சர்ச்சை
புதிய இணைப்பு
நடிகர் தர்மேந்திரா கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர் இறந்து விட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
ஆனால் சிறிது நேரத்திலேயே, அவர் உயிருடன் இருப்பதாகவும் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தர்மேந்திராவின் மகள் ஈஷா தியோல் தெரிவித்தார்.
அதேபோன்று நடிகை ஹேமாமாலினியும் தனது கணவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் ஊடகங்கள் தவறான செய்தியை பரப்புகின்றன என்று தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
இந்தி திரையுலகின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா உடல்நலக்குறைவால் காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை மோசமாக இருந்ததால் மும்பையில் (Mumbai) உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் இன்று (11.11.2025) காலை மும்பையின் பிரீச் கேண்டி மருத்துவமனையில் அவர் காலமானதாக மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளதாக சில ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
திரையுலகினர் இரங்கல்
உயிரிழக்கும் போது அவருக்கு வயது 89 என்பதுடன், தர்மேந்திராவின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஹிந்தியில் பாலிவுட் திரையுலகில் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக ஜொலித்த தர்மேந்திரா, பாலிவுட் ட்டின் ஹீமேன் என்று அழைக்கப்பட்டார்.
அவர், ஹிந்தியில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இவருக்கு பிரகாஷ் கௌர் மற்றும் ஹேமமாலினி என்ற இரு மனைவிகளும், நடிகர்கள் சன்னி தியோல், பாபி தியோல், நடிகைகள் ஈஷா தியோல் மற்றும் அஹானா தியோல், அஜீதா மற்றும் விஜேதா ஆகிய ஆறு பிள்ளைகளும் உள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |