காத்தான்குடியில் முன்னாள் ஆயுததாரியால் தமிழ்பேசும் பௌத்த துறவிக்கு நேர்ந்த கதி
மக்களிடத்தில் பெரும் மரியாதையும் அன்பையும் பெற்ற தமிழ் பேசக் கூடிய பௌத்த தேரரான ராகுல தேரருக்கு காத்தான்குடி பிரதேசத்தில் இழைக்கப்பட்ட பெரும் அநீதியொன்று தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.
இது குறித்து சம்பந்தப்பட்ட தேரரும் தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றை வெளியிட்டு சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அந்த பதிவில் வாழ்க்கையிலேயே இதுவரை தான் சந்திக்காத வகையிலான அவமரியாதையை சந்தித்துவிட்டாகவும், அதனை காத்தான்குடியில் உள்ள ஒரு தலைவர் அரங்கேற்றியதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்தோடு, அந்த தலைவர் யார் என்பதை ஒரு இஸ்லாமிய தலைமை தன்னை சந்தித்து பேசினால் வெளிப்படுத்த முடியும் எனவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில், ராகுல தேரரை இந்நிலைமைக்கு ஆளாக்கிய நபர் குறித்து ஆராய்ந்து பார்த்ததில் அவர் தொடர்பான பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகியுள்ளன.
சம்பந்தப்பட்ட நபர் இதற்கு முன்னதாக ஒரு இராணுவ புலனாய்வு பிரிவில் பணியாற்றியவர் என்பதும் தெரியவருகிறது.
இதுபற்றிய பல்வேறு அதிர்ச்சிகரமான பின்னணிகள் குறித்து ஆழமாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |