துப்பாக்கிசூட்டிற்கு இலக்கான பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dhilak
புதிய இணைப்பு
மித்தெனிய, உல்ஹிட்டியாவ பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் உயிரிழந்தார்.
இன்று (15) மாலை இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முதலாம் இணைப்பு
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலக குற்றவாளி பெக்கோ சமனின் தாய் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மித்தெனிய - உல்ஹிடியாவ பிரதேசத்தில் இன்று துப்பாக்கிச் சூடு பதிவாகியுள்ளது.
காவல்துறையினர் விசாரணை
இதன்போது, காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அத்தோடு, இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி