இந்தோனேசியாவில் பயணிகள் படகில் தீ விபத்து
இந்தோனேசியாவின் சுற்றுலாத் தீவான பாலிக்கு அருகே ஒரு படகில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவத் இ்ன்று (12.08.2026) இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்ததுடன், 170-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டதாக இந்தோனேசியாவின் மீட்புக் குழு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஒருவர் பலி
பாதிக்கப்பட்ட பயணிகள் படகிலிருந்து, இரண்டு அவுஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் உட்பட 172 பேர் ஒரு கடற்படைக் கப்பல் மற்றும் பிற கப்பல்கள் மூலம் வெளியேற்றப்பட்டதாக மேலும் கூறப்படுகிறது.

எனினும் காயமடைந்தவர்கள் அல்லது காணாமல் போனவர்கள் தொடர்பில் எந்த தகவலையும் அந்நாட்டு அரசாங்கம் இதுவரையில் வெளியிடவில்லை.
முன்னதாக கடந்த வாரம் ஜாவா தீவுப் பகுதியில் படகு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
தினசரி போக்குவரத்து மற்றும் சுற்றுலாவுக்காகப் படகுப் போக்குவரத்தை பெரிதும் நம்பியிருக்கும், 17,000-க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட இந்தோனேசியாவில் கடல்சார் விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |