அதிகரிக்கும் பலி எண்ணிக்கை! நிலநடுக்கத்தால் நிலைகுலைந்த கொலம்பியா
மேற்கு கொலம்பியாவில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 188 ஆக உயர்ந்துள்ளதுடன், 1,677 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதன்போது, காலி (Cali) நகரில் 95 இறப்புகளும் 997 காயங்களும் பதிவாகியுள்ளதுடன், பெரேரா (Pereira) நகரில் 79 இறப்புகளும் 278 காயங்களும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இந்த நிலநடுக்கத்தால் 1,575 வீடுகளும், ஆறு விமான நிலையங்களின் உள்கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளதாக கொலம்பிய ஜனாதிபதி அபெலார்டோ டி லா எஸ்பிரியெல்லா முன்னதாக அறிவித்திருந்தார்.
அவசர நிவாரணத் தேவைகள்
கொலம்பிய புவியியல் சேவையின் கூற்றுப்படி, இந்த நிலநடுக்கம் மேற்கு கொலம்பியாவில் 96 கி.மீ. ஆழத்தில், சோகோ (Chocó) மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் டெல் பால்மர் அருகே மையப்புள்ளியைக் கொண்டு தாக்கியதாக தெரியவருகிறது.

Image Credit: CNN
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாகாணங்களின் தலைநகரங்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வருவதாகவும், சேதங்களை மதிப்பிட்டு அவசர நிவாரணத் தேவைகளைக் கண்டறிய உள்ளூர் மேயர்கள் மற்றும் அவர்களது குழுக்களுடன் தொடர்புகொண்டு வருவதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |