வவுனியாவில் இன்றுமாலை விபத்து : ஒருவர் பலி : மூவர் படுகாயம்
Vavuniya
Sri Lanka Police Investigation
Accident
Death
By Independent Writer
Courtesy: kapil
வவுனியா சூடுவெந்தபிலவிற்கு அண்மித்த பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
வவுனியாவில் இருந்து சென்றுகொண்டிருந்த டிப்பர் வாகனம் சூடுவெந்தபிலவு பகுதியில் சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்துகொண்டிருந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றது.
டிப்பர் -முச்சக்கரவண்டி மோதி விபத்து
விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் படுகாயமடைந்தநிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.மேலும் காயமடைந்த மூவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பாக உலுக்குளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி