ட்ரம்பின் சொகுசு மாளிகையில் சிக்கிய இரகசிய ஆவணங்கள்
டிரம்ப் மாளிகையில் அதிரடி சோதனை
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப். அவருக்கு சொந்தமாக மார்-ஏ-லகோ என்ற சொகுசு மாளிகை புளோரிடா மாகாணத்தில் உள்ளது. இந்த மாளிகையில் கடந்த 8ம் திகதி எப்.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதன்போது சொகுசு இரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக எப்.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த அதிபர் தேர்தலில் தோற்ற டிரம்ப், வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறியபோது இரகசிய ஆவணங்களை பெட்டியில் வைத்து எடுத்து சென்றதாகவும், அந்த ஆணங்களை இந்த சொகுசு மாளிகையில் வைத்து இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இரகசிய ஆவணங்களை கண்டுபிடிப்பதற்காக டிரம்பின் சொகுசு மாளிகையில் சோதனை நடத்தப்பட்டது. இச்சோதனைக்கு டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்தார். அதே வேளையில் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும் தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட இரகசிய ஆவணங்கள்
இந்த நிலையில் டிரம்ப்பின் சொகுசு மாளிகையில் இருந்து இரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக எப்.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சோதனைக்கான அனுமதி, பறிமுதல் செய்யப்பட்டதை குறித்து விவரங்களை எப்.பி.ஐ. அதிகாரிகள் நீதிமன்றில் தாக்கல் செய்தனர். சீலிட்ட அந்த கவரை பிரிக்க நீதித்துறை அனுமதி வழங்கியது.
அணு ஆயுதங்கள் தொடர்பான இரகசிய ஆவணங்கள்
இதையடுத்து கவரை புளோரிடா நீதிபதி பிரித்தார். அதில், அரசு கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்கக்கூடிய இரகசிய ஆவணங்கள் டிரம்பின் சொகுசு மாளிகையி் கைப்பற்றப்பட்டதாகவும், பிரான்ஸ் அதிபர் குறித்த தகவல்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, சோதனையில் அணு ஆயுதங்கள் தொடர்பான இரகசிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக வோஷிங்டன் போஸ்ட் ஊடகம் தெரிவித்துள்ளது.
