பிபா மகளிர் உலக கிண்ணத்தை கைப்பற்றியது ஸ்பெயின்
இரண்டாம் இணைப்பு
இன்று இடம்பெற்ற பிபா மகளிர் உலக கிண்ணத்தை ஸ்பெயின் கைப்பற்றியுள்ளது.
இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் முதல் முறையாக மகளிர் உலக கிண்ணத்தை வென்றது.
அவுஸ்திரேலியாவில் நடந்த இந்த போட்டியில் 29வது நிமிடத்தில் கப்டன் ஓல்கா கார்மோனா கோல் அடித்தார்.
இங்கிலாந்து இரண்டாவது பாதியில் தீவிர முயற்சி மேற்கொண்ட போதும், ஆட்டத்தை சமனிலைப்படுத்த முடியவில்லை.
மகளிர் உலக கிண்ணத்தை வென்ற ஐந்தாவது அணி என்ற பெருமையை ஸ்பெயின் பெற்றது.

முதலாம் இணைப்பு
பிபா மகளிர் உலக கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி இன்று (20) இடம்பெறுகின்றது.
இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டி இலங்கை நேரப்படி இன்று மாலை 3.30இற்கு அவுஸ்திரேலியாவின், சிட்னியில் ஆரம்பமாகியுள்ளது.

இந்தப் போட்டிக்காக 75 ஆயிரத்துக்கும் அதிகமான அனுமதிச் சீட்டுக்கள் விற்பனையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப் போட்டி ஒரு மாதத்திற்கு முன்னர் ஆரம்பமானதுடன் இந்த தொடரில் 32 அணிகள் பங்குபற்றின.
இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் அணிகள் முதற் தடவையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.