எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சம்
Sri Lankan Peoples
SL Protest
Sri Lanka Fuel Crisis
By Jaso
உரிய பாதுகாப்பு
எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படாவிட்டால் விநியோகத்தில் இருந்து விலகுவதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தடையின்றி எரிபொருளை விநியோகம் செய்வதை குறைத்துள்ளதால் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் நிற்பவர்கள் ஆத்திரமடைந்து கலவரமாக நடந்து கொள்வதாக சங்கத்தின் தலைவர் குமார் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

தாக்கப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள்
இதுவரை சுமார் 50 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தாக்கப்பட்டுள்ளதாகவும், இந்நிலை நீடித்தால் நிரப்பு நிலையங்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி