யாழ். தேர்த் திருவிழாவில் தாலி திருட்டு : கொழும்பை சேர்ந்த பெண் கைது
யாழ்ப்பாணம் (Jaffna) - கன்னாதிட்டி காளிகோயில் கும்பாபிஷேகத்திற்கு வந்த அடியார்களின் தாலிக்கொடி மற்றும் நகைகளை திருடிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணப் பிராந்திய காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின்படி கன்னாதிட்டி காளி கோயில் இந்து இளைஞர்களின் ஒத்துழைப்புடன் இன்று (09) குறித்த பெண் ஒரு மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா (Vavuniya) பூந்தோட்டத்தில் வசிக்கும், கொழும்பு (Colombo) வெல்லம்பிட்டியவை சேர்ந்த 27 வயதான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டார் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறை விசாரணை
பெண்ணை கைது செய்து யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் தடுத்து வைத்து விசாரித்த பொழுது, பெண்ணின் உள்ளாடைக்குள் இருந்து திருடப்பட்ட தாலிக்கொடி மற்றும் நகைகள் மீட்கப்பட்டது என காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த பெண் மேலதிக விசாரணைக்காக யாழ்ப்பாணப் பிராந்திய குற்றதடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கபட்டு, நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.. |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![இராஜவரோதயம் சம்பந்தன் மரணம் யாரையும் மன்னிப்பதில்லை !](https://cdn.ibcstack.com/article/4a541f45-4b6b-46cc-8bfc-da43b80fd749/24-6682dbaba3ee0-md.webp)
இராஜவரோதயம் சம்பந்தன் மரணம் யாரையும் மன்னிப்பதில்லை ! 3 நாட்கள் முன்
![அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்…](https://cdn.ibcstack.com/article/8170aadf-e519-44c1-8849-b5aa88b7da2a/24-66736d16968e6-sm.webp)