ஜனவரியில் இலங்கைக்கு கிடைத்த பல மில்லியன் அமெரிக்க டொலர்கள்
இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட வெளிநாட்டு பணவலுப்பல்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 573 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.
இது கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாத்தில் பதிவு செய்யப்பட்ட 487.6 மில்லியன் அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது 17.5% சதவீத அதிகரிப்பு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்நியச் செலாவணி
இதற்கிடையில், 2024 ஆம் ஆண்டில் மொத்தமாக வெளிநாட்டுத் தொழிலாளர்களிடமிருந்து 6.57 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டுக்கு கிடைத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இது 2023 ஆம் ஆண்டில் பெறப்பட்ட 5.96 பில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடும் போது 10.1% சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணமானது, நாட்டின் ஏற்றுமதி வருமானத்தைத் தவிர, இலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் இரண்டாவது பெரிய மூலம் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)