சட்டவிரோத சொத்து குவிப்பு: மனுச நாணயக்கர விசாரணைக்கு அழைப்பு
நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவுக்கு முன்னான் அமைச்சர் மனுச நாணயக்கர அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பணமோசடி சட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்கவே அவர் எதிர்வரும் 20 ஆம் திகதி அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக லஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான குடிமக்கள் அதிகார அமைப்பின் தலைவர் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு அளித்துள்ளார்.
சட்டவிரோத சொத்து
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக இருந்தபோது சட்டவிரோதமாக சொத்துக்களை சேமித்தார என்பது குறித்து விசாரணை நடத்துமாறு முறைப்பாட்டாளர் கோரியுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
அதன்படி, குறித்த சம்பவம் தொடர்பான விசாரணையில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார எதிர்வரும் 20 ஆம் திகதி அழைக்கப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

