மன்னாரில் மாயமான பெருந்தொகை தங்க நகைகள்! நான்கு பெண்கள் அதிரடி கைது
மன்னார் காவல்துறை பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் 50 வீட்டுத்திட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த புதன் கிழமை (04) இரவு இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான பெண் ஒருவர் உள்ளடங்களாக நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்போது, திருடப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பெருந்தொகை பணம் ஆகியவற்றையும் அவர்களிடமிருந்தது மன்னார் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
மன்னார் சாந்திபுரம் 50 வீட்டுத்திட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த புதன்கிழமை (04) இரவு பாரிய திருட்டுச் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளமை குறித்து சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர் நேற்று வியாழக்கிழமை (5) மன்னார் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
பிரதான சந்தேக நபரான பெண்
இதன்போது, குறித்த வீட்டிலிருந்து தாலிக்கொடி, சங்கிலி, காப்பு உள்ளடங்களாக 15 பவுன் தங்க நகைகளும், 4 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணமும் காணாமல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, முறைப்பாடுகளுக்கு அமைவாக மன்னார் காவல்துறையினர் முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது பிரதான சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டார்.
15 பவுன் தங்க நகைகள்
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது ஏனைய சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, அவர்களிடம் இருந்து திருடப்பட்ட சுமார் 56 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 15 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் என்பன முழுமையாக மீட்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களான நான்கு பெண்களும் தற்போது மன்னார் காவல்நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
மேலதிக விசாரணைகளை மன்னார் காவல்துறையினர், முன்னெடுத்து வருவதோடு விசாரணைகளின் பின்னர் மீட்கப்பட்ட நகைகள், பணம் மற்றும் கைது செய்யப்பட்ட நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த மன்னார் காவல்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |