40 முக்கிய நாடுகளுக்கு விசா இலவசம்! கிடைத்தது அமைச்சரவை அனுமதி
நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில், தேர்ந்தெடுக்கப்பட்ட 40 நாடுகளைச் சேர்ந்த கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு இலவச சுற்றுலா விசாக்களை வழங்கும் ஆறு மாத காலத் திட்டத்தை இலங்கை அறிமுகப்படுத்த உள்ளது.
2025 ஜூலை 21 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முயற்சிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
குடியேற்றம் மற்றும் குடியகல்வுச் சட்டத்தின் கீழ், இலவச விசாக்களை வழங்குவதற்காக சட்ட வரைவாளர் தயாரித்த வரைவு விதிமுறைகள் ஒப்புதலுக்காகப் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
40 நாடுகள்
இந்த முன்மொழிவு பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்டு, அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றது.

இந்த நடவடிக்கை அதிக சுற்றுலா பயணிகளை ஊக்குவித்து, இலங்கையை ஒரு முன்னணி சுற்றுலாத் தலமாக வலுப்படுத்தும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
இன்று (31) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிந்தைய ஊடக சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ அறிவித்தபடி, தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகள் பின்வருமாறு;
- அவுஸ்திரேலியா
- ஆஸ்திரியா
- பஹ்ரைன்
- பெலாரஸ்
- பெல்ஜியம்
- கனடா
- சீனா
- செக்குடியரசு
- டென்மார்க்
- பின்லாந்து
- பிரான்ஸ்
- ஜெர்மனி
- இந்தியா
- இந்தோனேசியா
- ஈரான்
- இஸ்ரேல்
- இத்தாலி
- ஜப்பான்
- கஜகஸ்தான்
- குவைத்
- மலேசியா
- நேபாளம்
- நெதர்லாந்து
- நியூசிலாந்து
- நோர்வே
- ஓமான்
- பாகிஸ்தான்
- போலந்து
- கத்தார்
- ரஷ்யா
- சவுதி அரேபியா
- தென் கொரியா
- ஸ்பெயின்
- ஸ்வீடன்
- சுவிட்சர்லாந்து
- தாய்லாந்து
- துருக்கி
- ஐக்கிய அரபு அமீரகம்
- ஐக்கிய இராச்சியம்
- அமெரிக்கா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
4 நாட்கள் முன்