சென்னையில் த.வெ.க.வினர் மீது கொடூர தாக்குதல் - கொதித்தெழுந்த விஜய்
கள ஆய்வில் ஈடுபட்ட நம் கழகத்தினர் மீது ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் அராஜகத் தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தவெகவின் செல்வாக்கைக் கண்டு பயந்து, ஜனநாயகத்தின் குரல்வளையை திமுக நெரிப்பதாகவும், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் இதற்குத் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விடயத்தை எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
வன்முறையைக் கட்டவிழ்த்து
அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், சென்னை பாரிமுனைப் பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது 100-க்கும் மேற்பட்ட ரவுடிகள் அராஜக தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.

இந்தத் தாக்குதலில், 4 மாதக் கர்ப்பிணி உள்பட நிர்வாகிகள் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
படுகாயம் அடைந்த கழகத் தோழர்கள் 6 பேரும் விரைவில் குணமடைய விழைகிறேன். தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்களிடையே பெருகி வரும் செல்வாக்கைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள், மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றுள்ள நம் கழகத் தோழர்கள் மீது இவ்வாறான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
ஜனநாயகத்தின் குரல்வளை
மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றுள்ள நம் கழகத் தோழர்கள் மீது இவ்வாறான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயலாகும். தி.மு.க.வின் தோல்வி பயத்தையே இது காட்டுகிறது.
இந்த அராஜகத் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டப் போவது நிச்சயம் என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |