எரிபொருள் வரிசையில் நிற்க வேண்டாம்!! பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு
Fuel Price In Sri Lanka
Sri Lanka Economic Crisis
Minister of Energy and Power
Kanchana Wijesekera
Sri Lanka Fuel Crisis
By Kanna
பெட்ரோல் வாகன உரிமையாளர்கள் அடுத்த 3 நாட்களுக்கு எரிபொருள் வரிசையில் நிற்க வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபன பெட்ரோல் இருப்புக்கள் மிகவும் குறைவாக உள்ளதாகவும், அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
லங்கா ஐஓசி சில பெட்ரோல் பங்குகளை வைத்திருப்பதாகவும், மேலும் பெட்ரோலை சந்தைக்கு வெளியிடுமாறு லங்கா ஐஓசியிடம் அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
23ஆம் திகதிக்கு பின்னர் பெட்ரோல் விநியோகம் வழமைக்கு வரலாம் எனவும், அதற்குள் பெட்ரோல் கப்பல் வருமென எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்