எரிபொருள் விநியோகம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்!
இலங்கை முழுவதும் உள்ள 20 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கியு.ஆர் அட்டை முறைமை 4,708 வாகனங்களுக்கு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இதனை பதிவிட்டுள்ளார்.
இன்றும் 25 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கியு.ஆர் அட்டை முறைமை சோதனை செய்யப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முன்பதிவு மற்றும் விநியோகத்தில் தாமதம் காரணமாக சோதனை செய்யப்படாத 5 எரிபொருள் நிலையங்களில் அடுத்த 2 நாட்களில் குறித்த முயற்சி மேற்கொள்ளப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் வாகன மக்கள் தொகையில் சுமார் 3மில்லியனுக்கு மேற்பட்டோர் இந்த கியு.ஆர் அட்டை முறைமை சேவையைப் பெற்றுள்ளனர்.
Fuel Pass QR was successfully tested at 20 locations islandwide on 4708 vehicles. CPC was scheduled to test at 25 locations. Due to non placement of orders, delays in placing orders & delays in delivery, the 5 locations that was not tested will be tested in the next 2 days. pic.twitter.com/fdgOmB61b4
— Kanchana Wijesekera (@kanchana_wij) July 24, 2022