மாதம் இரண்டு தடவை எரிபொருள் விலை குறைக்கப்படும்! அமைச்சரின் புதிய அறிவிப்பு
உல சந்தையில் தற்போதைய எரிபொருள் விலை நிலவரத்தின் படி எதிர்காலத்தில் இலங்கையிலும் எரிபொருள் விலை மேலும் குறைவடையும் வாய்ப்புள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதன்படி, அடுத்த எரிபொருள் விலைத் திருத்தத்தின் மூலம் எரிபொருள் விலை குறையக் கூடும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக, அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.
மாதமும் இரண்டு தடவை குறைக்கப்படும்
ஒவ்வொரு மாதமும் இரண்டு தடவைகள் எரிபொருள் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு மாதமும் 1ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் எரிபொருட்களின் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு எரிபொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுமாக இருந்தால், அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகளும் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.