தொடரும் எரிபொருள் வரிசை இறப்புகள்!! மேலுமொருவரை காவு வாங்கியது
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Fuel Crisis
By Kanna
களுத்துறை, கல்பத்த - படகொட எரிபொருள் நிலையத்தில் டீசலுக்கு வரிசையில் நின்ற நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் அஹங்கம பிரதேசத்தில் வசிக்கும் 63 வயதுடைய தனியார் இறப்பர் சேகரிப்பு நிறுவனம் ஒன்றில் சாரதியாக பணிபுரிந்து வந்தவராவார்.
இவர் கடந்த 5 நாட்களாக டீசலுக்காக வரிசையில் நின்றுள்ள இந்நபர், வரிசையில் காத்திருந்தபோது, அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.