சுதந்திர தமிழீழத்திற்கு 100% ஆதரவு - வெற்றியளித்த பொதுவாக்கெடுப்பு..!
அமெரிக்க தலைநகர் வாசிங்டன் அருகில் வெர்சீனியாவில் நடைபெற்ற மாதிரி பொதுவாக்கெடுப்பில் சுதந்திர தமிழீழத்திற்கு 100% மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது.
தமிழீழத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட 1,75,000க்கும் மேற்பட்ட நம் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், அந்த வரலாற்றுத் துயரத்தை நம் அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் விதமாகவும் உலகத் தமிழ் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் நினைவேந்தல் நிகழ்ச்சியை பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த பலநாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் , அறிஞர்கள்,சட்டவல்லுநர்களை சிறப்பு பேச்சாளர்களாக அழைத்து நடத்தி வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு மே 28ம் நாளன்று இழந்த சொந்தங்களை நினைவு கூர்ந்து ஒரு மணித்துளி மௌன அஞ்சலியுடன் ஆரம்பித்து ஈகைச் சுடர் மற்றும் எழுச்சிச் சுடர் ஏற்றுதல், மலர் வணக்கம் பிறகு சிறப்பு பேச்சாளர்கள் உரை நடைபெற்றது.
சிறப்பு பேச்சு

திரு.ருத்ரகுமரன் விசுவநாதன், தலைமை அமைச்சர் – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (Transnational Government of Tamil Eelam – TGTE)
திரு.சுந்தர் குப்புசாமி, செயலாளர் United States Tamil Action Group (USTAG) , Ex president – வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (Federation of Tamil Sangams of North America, FeTNA)
திருமதி. மீனா இளஞ்செழியன் – Tamil Americans United PAC
திரு. பாபு விநாயகம் – பாடல் ஆசிரியர்/ இசை அமைப்பாளர்
திரு.கோபி ஏகாம்பரம், கர்நாடக தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர்
ஆகியோர் இழந்த மக்களை நினைவு கூர்ந்து இனப்படுகொலை பற்றியும் இனப்படுகொலைக்கு நீதி வேண்டிய வழிமுறைகளைப் பற்றியும் சர்வதேச நாடுகளின் நிலை பற்றியும் பொதுவாக்கெடுப்பின் தேவை மற்றும் அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகள் சபையில் அறிமுகம் செய்யப்பட்ட (H . RES . 427) தொடர்பாக இனப்படுகொலை பற்றி உலகிற்கு உணர்த்தும் விதமாக வெளியில் செல்லும் போதோ அல்லது வீட்டிலிருந்து காணொளி வாயிலாக மற்றவர்களுடன் பேசும் போதோ நினைவு நாளை சுற்றத்தாருக்கு வெளிப்படுத்தும் வகையில் குரல் வளை நெரிக்கப்பட்ட இனத்தின் மக்கள் எவ்வாறு நமக்கு நாமே தோள் கொடுத்து உலகம் முழுதும் தெரியப்படுத்தும் வகையில் வலிமையாக இணைத்து செயல்பட வேண்டிய தேவைகளையும் அது எந்த வகையில் இன விடுதலைக்கு வழிகோலும் என்றும் எடுத்துரைத்தார்கள்.
பொது வாக்கெடுப்பு

அடுத்ததாக உலகத் தமிழ் அமைப்பு ஒருங்கிணைப்பில் “பொது வாக்கெடுப்பிற்கான மக்கள் இயக்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட மாதிரி வாக்கெடுப்பில்” பொது மக்கள் கலந்து கொண்டு தமது வாக்குகளை அளித்தார்கள்.
இடம்: 3225 Kinross Cir, Herndon, VA 20171 USA
நாள்: *மே 28, 2023 * நேரம்: 10:30 காலை (கிழக்கு)
பொது வாக்கெடுப்பின் முடிவின் விபரம். 05/28/2023
சுதந்திர தமிழீழம் - 100%
சமஷ்டி - 0%
ஒற்றையாட்சிக்குள் தீர்வு - 0%
வேறு தெரிவு - 0%
செல்லுபடிஅற்ற வாக்குகள் - 0%
இதன் போது குறித்த மாதிரி பொதுவாக்கெடுப்பில் சுதந்திர தமிழீழத்திற்கு 100% மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது.