விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது
தேசிய மக்கள் சக்தியின் (NPP) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் நிபுண ஆராச்சியை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இன்று(23) பதவியேற்ற அநுரகுமார திஸாநாயக்கவினால் வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு லக்ஸ்மன் நிபுண ஆராச்சியின் பெயர் தேர்தல் ஆணைக்குழுவால் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினராக லக்ஸ்மன் நிபுண ஆராச்சி
2020 பொதுத் தேர்தல் முடிவுகளின்படி தேசிய மக்கள் சக்தியின் விருப்பு வாக்குகளில் கொழும்பு மாவட்டத்தில் இருந்து அடுத்த இடத்தில் இருந்த லக்ஸ்மன் நிபுண ஆராச்சி நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் ஆணைக்குழு
ஜனாதிபதியாக அநுர குமார திஸநாயக்க பதவியேற்றதை அடுத்து அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமான நிலையில் அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க நாடாளுமன்ற உறுப்பினராக லக்ஸ்மன் நிபுண ஆராச்சி நியமிக்கப்படுவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்மூலம் தேசிய மக்கள் சக்திக்கு நாடாளுமன்றில் எம்.பிக்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |