சூறையாடப்படும் தமிழர் காணிகள் : அம்பலமாகும் அரசின் கோர முகம்

S. Sritharan Sri Lanka Politician Current Political Scenario
By Shalini Balachandran May 16, 2025 11:41 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

வடக்கு மற்றும் கிழக்கில் தற்போது பாரிய பேசுபொருளாக தமிழ் மக்களின் காணி சுவீகரிப்பு விடயம் தலைதூக்கியுள்ளது.

கடந்த மார்ச் 28 ஆம் திகதி 2430 ஆம் இலக்க வர்ததமானியொன்று அரசு தரப்பிலிருந்து வெளியிடப்படிருந்தது.

குறித்த வர்த்தமானியில், வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள காணிகளை தமிழ் மக்கள் உரிமை கோரா விட்டால் அது அரச காணிகளாக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு, யாழில் (Jaffna) 3669 ஏக்கர் காணியும், முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தில் 702 ஏக்கர் காணியும், கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தில் 515 ஏக்கர் காணியும் மொத்தமாக 5,940 ஏக்கர் நிலங்கள் வடக்கில் சுவீகரிப்பு செய்யப்படுவதாக அந்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் சட்டத்தரணி சுமந்திரன் (M. A. Sumanthiran) விளக்கங்களை வெளியிட்டிருந்ததுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் (S. Shritharan) மற்றும் பலதரப்பட்ட தமிழ் அரசியல் தலைமைகள் என அவர்களது கண்டங்களை வெளியிட்டிருந்தனர்.

இந்தநிலையில், குறித்த வர்த்தமானியை அரசு மீளப்பெறப்படுவதை உறுதிப்படுத்தாவிட்டால் பாரிய போராட்டம் வெடிக்கும் எனவும் தமிழ் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஒரு தனியார் தரப்பு இவ்வாறு மக்களின் காணியை அபகரிக்குமாக இருந்தால் அதனை அரசிடம் முறையிடலாம் ஆனால் இங்கு அரசாங்கமே இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதை எந்த பிரிவில் சேர்ப்பது என தெரியவில்லை.

வாக்குக்கான தேர்தல் நேரத்தில், நாங்கள் தமிழ் மக்களுக்கு அதை செய்வோம் இதை செய்வோம் என பலதரப்பட்ட உறுதிமொழியை அநுர (Anura Kumara Dissanayake) அரசாங்கம் வழங்கியது.

அத்தோடு, காணாமலாக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் தகுந்த பதிலை மக்களுக்கு பெற்று தருவதாகவும் மேடைகளில் அநுர வாக்குறுதி எல்லாம் வழங்கி வாக்கை சம்பாரித்து இருந்தார்.

ஆனால், அரசு போகும் போக்கை பார்த்தால் காணாமாலாக்கப்பட்ட உறவுகளை கண்டுபிடிப்பதை தாண்டி இருக்கும் தமிழ் மக்களுக்கு வசிக்க இடமின்றி காணாமலாக்கி பார்க்கும் போல.

தனது அரசாங்கம் இதை சாதித்தது, அதை சாதித்தது என பெருமை பேசும் எந்த தேசிய மக்கள் சக்தியை சார்ந்த அரசியல் தலைமைகளும் வாய்த்திரப்பதையும் காணக்கூடியவாறு இல்லை.

பார்க்க போனால், கடந்த அரசாங்கங்களுக்கும் தற்போதைய அரசிற்கும் எந்த வேறுபாடுகளும் காணப்படுவதாக தெரியவில்லை.

தற்போது, பாரிய அதிர்வலையை கிளப்பி இருக்கும் இவ்விடயம் தொடர்பில் கதைப்பதற்கு தேசிய மக்கள் சக்தியில் அரசியல் தலைமைகள் இல்லை.

ஆனால், தேர்தல் முடிந்து இவ்வளவு காலம் ஆகியும் வெற்றி பெருமை பற்றி மேடை மேடையாய் கூவ குறித்த அரசியல் தலைமைகளுக்க நேரம் உள்ளது.

இந்தநிலையில், இவ்விடயம் குறித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டாலும் அரசு தரப்பு வாய்த்திரக்கப்படுமா என்பது தற்போது கேள்விக்குரியாகி உள்ளதுடன் யுத்தத்தாலும், வறுமையாலும் பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் மீண்டும் வீதிக்கி இறக்கி பாரக்கும் ஆளும் வர்க்கத்தை நினைக்க வெட்கமாகவும் உள்ளது.

இவ்வாறு, இந்த காணி சுவீகரிப்பு மற்றும் ஆவணப்படுத்தலின் முக்கியத்துவத்தை சட்டத்தரணி செலஸ்டின் ஸ்டானிஸ்லாஸ் விளக்கியுள்ளார்.

இது தொடர்பில் அவர் பலதரப்பட்ட விரிவான கருத்துக்களை எடுத்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் : அதிர்ச்சியில் அமெரிக்க அரசு

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் : அதிர்ச்சியில் அமெரிக்க அரசு

பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் வந்தால் : பாகிஸ்தான் விடுத்துள்ள எச்சரிக்கை

பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் வந்தால் : பாகிஸ்தான் விடுத்துள்ள எச்சரிக்கை

இஸ்ரேலின் தாக்குதலால் காசாவில் கொத்து கொத்தாக பலியாகும் உயிர்கள்

இஸ்ரேலின் தாக்குதலால் காசாவில் கொத்து கொத்தாக பலியாகும் உயிர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!         
ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025