நாமல் கைதால் gen-z இளைஞர்கள் கொந்தளிப்பு! முன்னாள் அமைச்சரின் விளக்கம்
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளமையை அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாக நான் கருதவில்லை என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
அத்துடன் அவரது கைது இளைஞர்கள் மத்தியில் எவ்வித கோபத்தையும் ஏற்படுத்தவில்லை என வாசுதேவ குறிப்பிட்டார்.
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே வாசுதேவ நாணயக்கார மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அரசியல் பழிவாங்கல்
அவர் மேலும் தெரிவித்ததாவது:- "ஒருவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தாமல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்தால் மட்டுமே அதனை அரசியல் பழிவாங்கல் எனக் கூற முடியும்.

மாறாக, கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவது சாதாரண சட்ட நடைமுறையாகும்.
எனவே, அதில் அரசியல் பழிவாங்கல் எதுவும் இல்லை. அந்தவகையில், நாமல் ராஜபக்ஷவின் கைது நடவடிக்கையில் நான் எவ்வித தவறையும் காணவில்லை.
சட்டத்தை நடைமுறைப்படுத்துவது பழிவாங்கும் நடவடிக்கையா அல்லது அரன் கடமையா என்பது நீதிமன்றத் தீர்ப்பின் மூலமே தெளிவுபெறும் என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |