உலக வெப்பநிலை குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்
2025 - 2029 இற்கும் இடையேயான ஐந்து ஆண்டுகளுக்குள் உலகின் சராசரி வெப்பநிலை புதிய உச்சம் தொட வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை உலக வானிலை ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தற்போது உலக நாடுகள் பருவநிலை மாற்றத்தை எதிர்கொண்டு வரும் நிலையில் பருவக்காலங்களில் ஏற்படும் மாற்றங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.
சராசரி வெப்பநிலை
இதன்படி, 2025 - 2029 இற்கு இடையேயான ஐந்து ஆண்டுகளுக்குள் ஆண்டு சராசரி வெப்பநிலை புதிய உச்சம் தொடுவதற்கு 80 சதவீதம் வாய்ப்புள்ளதாக குறித்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த புதிய உச்சமானது கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு பருவநிலை மாநாட்டில் நிர்ணயிக்கப்பட்ட சர்வதேச வெப்பநிலை வரம்பை மீறியதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, நடப்பு பத்தாண்டு காலம் முடிவதற்குள் உலக வெப்பநிலை ஆபத்தான அளவில் இரண்டு டிகிரி செல்சியஸ் வரை உயரலாம் என்றும், அதனால் ஆர்க்டிக் பனிப்பிரதேசம் வெப்பமடைந்து உருகுவதுடன் கடல் நீர் மட்டமும் உயரும் வாய்ப்புள்ளதாகவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
