அரசுக்கு 48 மணிநேர காலக்கெடுவை விதித்துள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்
மருத்துவர்களின் பிரச்சினைகளுக்கும் சுகாதார அமைப்புக்கும் தீர்வுகளை அறிவிப்பதற்கு பொறுப்பானவர்களுக்கு 48 மணி நேரம் கால அவகாசம் வழங்க அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.
48 மணி நேரத்திற்குள் தீர்வுகளை வழங்க முடியாவிட்டால், 26 ஆம் திகதி நடைபெறும் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு கூட்டத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று சங்கத்தின் செயலாளர் மருத்துவர் பிரபாத் சுகததாச வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உடனடியாக தலையிட வேண்டும்
மருத்துவர்கள் மற்றும் சுகாதார அமைப்பின் பிரச்சினைகளைத் தீர்க்க ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுடன் தொடர்ச்சியான தீர்வுகளை அறிவிப்பதன் மூலம் சுகாதார அமைப்பில் தற்போதைய சிக்கல் நிறைந்த சூழ்நிலையைத் தீர்க்க ஜனாதிபதி, சுகாதார அமைச்சர் மற்றும் பிற பொறுப்பான நபர்கள் உடனடியாக தலையிட வேண்டும் என்று சங்கம் நம்புவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |