9 ஆண்டுகள் பின்னோக்கி நகர்ந்த சிறிலங்கா
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் இரண்டரை வருட ஆட்சி காலத்தில் நாடு 09 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற நிதி தெரிவுக்குழுவின் தலைவருமான ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
கடந்த நாடாளுமன்ற அமர்வின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஐ.எம்.எவ் நிபந்தனை
மேலும் இது தொடர்பில் கூறியுள்ள அவர், “சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய தேசிய கடன் மறுசீரமைக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுவது அடிப்படையற்றதாகும்.
ஒட்டுமொத்த கடன்களையும் மறுசீரமைக்குமாறு சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டது.
இதனால், தேசிய கடன்களை மறுசீரமைப்பதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க கடந்த மார்ச் மாதம் 06 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்துக்கு நிதியமைச்சர் என்ற ரீதியில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
மொத்த தேசிய உற்பத்தி
2048 ஆம் ஆண்டு நாட்டை அபிவிருத்தி செய்வதாக அதிபர் குறிப்பிடுகிறார்.
பொருளாதார விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும்.
2022 ஆம் ஆண்டு நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி மற்றும் தனிநபர் ஒருவரின் வருமானம் 3400 டொலராக குறைவடைந்துள்ளது” - என்றார்.
