லண்டனில் தமிழ் பெண்ணுக்கு அடித்த அதிஷ்டம்
லண்டனில் தமிழ்பெண்
லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் பணியாற்றும் வாய்ப்பை தமிழ்ப்பெண் ஒருவர் பெற்றுள்ள நிலையில் அவர் தனது பெற்றோருக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுத்து அசத்தியுள்ளார்.
தமிழகத்தின் நாகபட்டினம் மாவட்டத்தில் உள்ள தென்னடாா் கிராமத்தைச் சோ்ந்த தலைமையாசிரியா் சு. பாஸ்கரன் - ஆசிரியை தையல்நாயகி தம்பதியின் மூத்த மகள் சுபிக்சா. இவர் பள்ளிக்கூடத்தில் முதலாம் வகுப்பு முதல் தமிழ் வழியில் படித்தவா். 2021-ஆம் ஆண்டில் லண்டனுக்கு சென்ற அவா் அங்கு, லண்டன் யுஎஸ்ஏவில் எம்.எஸ் படித்து வந்தாா்.
பெற்றோருக்கு இன்ப அதிர்ச்சி
படிக்கும்போதே லண்டனில் உள்ள உலகின் தலைசிறந்த அணுசக்தி நிறுவனம் ஒன்றின் பொறியாளராக தோ்வாகி பணி வாய்ப்பை பெற்ற அதிர்ஷ்டசாலியானார் சுபிக்சா. படிக்க சென்ற நிலையில் பணி வாய்ப்பையும் பெற்று மகிழ்ச்சியோடு பணியாற்றி வரும் சுபிக்சா தனது பெற்றோருக்கு ஒரு அதிர்ச்சி தர முடிவு செய்தார்.
அதன்படி பெற்றோரிடம் தான் ஊருக்கு வருவதை தெரிவிக்காமல் இன்ப அதிா்ச்சி கொடுக்க திடீரென செவ்வாய்க்கிழமை வீட்டுக்கு வந்திருக்கிறார் சுபிக்சா. இதையடுத்து சுபிக்சாவை உள்ளூர் கிராமத்தினா் வரவேற்று பாராட்டியுள்ளனர்.
மேலும் சமூகவலைதளங்களிலும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்துள்ளது.
