1.8 பில்லியன் வழங்கவும்!! அரச தலைவர் கோட்டாபய உத்தரவு
அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக கொரோனா நிதியிலிருந்து 1.8 பில்லியன் ரூபாயை வழங்குமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார்.
இன்று (03) இடம்பெற்ற சுகாதாரத் துறை தொடர்பான கலந்துரையாடலின்போதே அரச தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொரோனா நிதியத்திலிருந்து உதவி
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நன்கொடையாளர்களிடமிருந்து பணம் சேகரிக்கப்பட்டது.
இந்த நிலையில், கொரோனா தொற்று தற்போது கட்டுக்குள் உள்ளதால், சுகாதாரத் தேவைகளுக்காக இந்தப் பணத்தைப் பயன்படுத்த முடியும் என அரச தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மருத்துவமனைகளுக்குத் தேவையான 234 வகையான மருந்துகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. உலக சந்தையில் மருந்துகளின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
இந்நிலைமையைக் கருத்திற்கொண்டு, உள்ளுர் மருந்துத் தொழிற்துறையை துரிதமாக அதிகரிப்பதற்கும் தேவையான மூலப்பொருட்களை இந்தியக் கடன் உதவியின் கீழ் பெற்றுக்கொள்வதற்குமான சாத்தியக்கூறுகளை அரச தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, ஹொரணையில் உள்ள ஒயாமடுவ மற்றும் மில்லேவ பிரதேசங்களை மையமாக கொண்டு மருந்துகளை உற்பத்தி செய்வதற்கு 12 முதலீட்டாளர்கள் முன்வந்துள்ளதாக ஊடகப் அரச தலைவர் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
உள்நாட்டில் மருந்து உற்பத்தி
அடுத்த சில மாதங்களில் உற்பத்தி நடவடிக்கைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், இந்த பகுதிகளில் 200 க்கும் மேற்பட்ட மருந்து வகைகளை உற்பத்தி செய்யும் திறன் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
