மட்டக்களப்பில் கோட்டாபய அரசாங்கத்தின் ஆட்சி? தகுதி அற்ற ஆயுதக் குழுக்களிடம் மட்டக்களப்பு மாவட்டம்!

Sonnalum Kuttram
By Independent Writer Sep 05, 2023 10:28 PM GMT

நாட்டை விட்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் அகற்றப்பட்டதாக தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க மார்தட்டிக் கொண்டாலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றுவரை கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான நிர்வாகமே நடைபெற்று வருகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் ஒரு ஜனநாயக ரீதியான நிர்வாகத்தை உருவாக்க முடியவில்லை.

தகுதியற்ற, கல்வி அறிவு இல்லாத, முன்னாள் ஆயுதக் குழுக்களின் கைகளில் மட்டக்களப்பு மாவட்ட நிர்வாகத்தை ஒப்படைத்து விட்டு அபிவிருத்தி குறித்தும் ஜனநாயகம் குறித்தும் சர்வதேச நாடுகளை ஏமாற்றி வருகிறார்.

கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை காட்டிக் கொடுத்து, கடத்தி கொலை செய்த முன்னாள் ஆயுதக் குழுக்களின் கைகளில் மீண்டும் மட்டக்களப்பு மாவட்ட அரச நிர்வாகம் உள்ளிட்ட அனைத்தும் சென்றிருக்கிறது.

ஆயுதங்களை காட்டி மட்டக்களப்பு மாவட்டத்தை தனது அராஜகத்தின் ஊடாக அடக்கி ஆளலாம் என சிந்தித்தவர்களுக்கு அரசியல் அதிகாரத்தை கையில் கொடுத்ததன் விளைவை மட்டக்களப்பு மாவட்டம் அனுபவித்து வருகிறது.

ஜனநாயக வழிக்கு திரும்ப முடியாது தவிக்கும் பிள்ளையான்!

தனது சிறு பராயம் வரை ஆயுதங்களினால் அனைத்தையும் கையாண்ட சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு தனதுக்கு எதிராக மாவட்ட ரீதியாக எழும் விமர்சனங்களுக்கு பதில் வழங்க முடியாது திணறி வருகிறார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவுக்கு தான் ஒரு தகுதி அற்ற தலைவர் என்பதை அவரது செயற்பாடுகள் பல முறை நிரூபித்திருக்கிறது.

அரச அதிகாரிகள் முதல் கொண்டு மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்கள் வரை தனது அதிகாரத்தை கொண்டு அடக்கி ஆளலாம் என அவர் நினைக்கிறார்.

சர்வதேச அளவில் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு துரோகியாக பார்க்கப்படும் சிவனேசதுரை சந்திகாந்தன் மீது பல நூற்றுக்கணக்கான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

பிள்ளையானுக்காக நீதிபதிகளை மாற்றிய கோட்டாபய அரசாங்கம்!

சிவனேசதுரை சந்திகாந்தனை சிறையில் இருந்து விடுதலை செய்வதற்காக கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் சட்டமா அதிபர் உட்பட பல நீதிபதிகளை மாற்றியதாக அவருடன் இருந்த அவரது கட்சியின் செயலாளர் ஆர்சாத் மௌலானா சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கின்றார்.

அது மட்டும் அல்ல சிவநேசதுரை சந்திரகாந்தன் மகிந்த ராஜபக்ச அரசு மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ அரசுக்காக செய்த கொலை சம்பவங்கள், கடத்தல் சம்பவங்கள் குறித்த பல தகவல்களை ஆதாரங்களுடன் சர்வதேச ஊடகங்களுக்கு வழங்கி உள்ளார்.

அது மாத்திரமல்ல இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்களின் பின்னணியிலும் கிழக்கில் செயற்படுகின்ற அந்த ஆயுதக் குழுக்களில் அங்கம்வகிக்கும் சிலர் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. 

எனவே வாக்களித்த மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு மட்டும் அல்ல சிவனேசதுரை சந்திகாந்தனை தங்களது அரசில் வைத்திருக்கும் ஆட்சியாளர்களுக்கும் சர்வதேச ரீதியில் மிகப்பெரிய அழுத்தம் எழுவதற்கே வாய்ப்புகள் உள்ளன.

இலங்கையில் நிலையான அரசாங்கம் ஒன்று அமையுமாக இருந்தால் சிவனேசதுரை சந்திகாந்தனையும் அவருடன் சேர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் பாதாள ஆயுதக் குழுக்களும் எதிர்காலத்தில் கைது செய்யப்படலாம்.

ஜனநாயகத்தை இழந்து தவிக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தை ஆயுதக் குழுக்களின் ஆட்சியில் இருந்து மீட்டெடுக்க மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைவருமே ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

தவறும் பட்சத்தில் மட்டக்களப்பு மாவட்டம் தொடர்ந்தும் தனது எதிர்காலத்தை இழந்து ஆயுதக் குழுக்களின் சர்வாதிகார அராஜக போக்கினால் அழிந்து போய் விடும்.

ReeCha
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia, India, வவுனியா, சிங்கப்பூர், Singapore, மலேசியா, Malaysia

26 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
கண்ணீர் அஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி

26 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015