கோட்டாபயவிற்கான செலவுகள் -அரசாங்கம் வெளியிட்ட தகவல்
கோட்டாபய வெளிநாட்டில் செய்யும் செலவு
அவ்வாறான அனைத்து செலவுகளும் முன்னாள் அதிபரின் தனிப்பட்ட பணத்திலிருந்தே செலவிடப்படுவதாக அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று (16) நடைபெற்ற ஊடக சந்திப்பில், முன்னாள் அதிபரின் வெளிநாட்டு செலவுகள் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியொன்றை எழுப்பினார்.
ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி
முன்னாள் மற்றும் தற்போதைய அதிபர்களுக்கு சட்டத்தின் மூலம் சில வரப்பிரசாதங்கள் கிடைக்கின்றது என வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன அதற்கு பதிலளித்தார்.
அவர் கூறிய அந்த கூற்றை முன்னாள் அதிபரின் வெளிநாட்டு செலவுகளுக்காக அரசாங்கம் பணத்தினை செலவிடுகிறது என்று கருத்து புலப்படும் வகையில் சில ஊடகங்கள் செய்திகள் பிரசுரித்திருந்தன. இது தொடர்பில் மேலும் ஆராய்ந்து பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
கோட்டாபய வெளியிட்ட தகவல்
தனது வெளிநாட்டு செலவுகள் குறித்து சில ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் தவறானவை என தெரிவித்த முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ, அனைத்து செலவுகளும் தனது தனிப்பட்ட பணத்தில் செலவிடப்படுவதாகவும் தெரிவித்ததாக மொஹான் சமரநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
தொடர்புடைய செய்தி
கோட்டாபயவின் பிரத்தியேக விமானத்திற்கு பணம் செலுத்திய சிறிலங்கா அரசாங்கம்..! உறுதிப்படுத்திய அமைச்சர்


