அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் முடிவு : நோயாளர்கள் நிம்மதி பெருமூச்சு
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளையதினம் (11) முதல் செயல்படுத்தப்படவிருந்த நாடளாவிய ரீதியிலான பணிப்புறக்கணிப்பை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
வைத்தியர்களின் இடமாற்றம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இடைநிறுத்தப்பட்ட பணிப்புறக்கணிப்பு
நாளை காலை 8.00 மணிக்குள் தமது கோரிக்கைகளுக்கு தீர்வுகள் வழங்கப்படாவிட்டால் அது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டது.
எனினும், சுகாதார அமைச்சருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது கிடைத்த நேர்மறையான மற்றும் ஆக்கபூர்வமான பதில்களைக் கருத்தில் கொண்டு நாடளாவிய பணிப்புறக்கணிப்பை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாகக் குழு இடைநிறுத்தியுள்ளது.
இதேவேளை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பை கைவிட்டதால் நோயாளர்கள் நிம்மதி பெருமூச்சை விடுகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 3 நாட்கள் முன்
