அரச ஊழியர்களின் சம்பள விவகாரத்தில் பொய்யுரைக்கும் ஹரிணி: குற்றஞ்சாட்டும் சாகல ரத்நாயக்க

Government Employee Sagala Ratnayaka Money Harini Amarasuriya
By Shadhu Shanker Nov 01, 2024 12:25 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

அரச ஊழியர்களின் சம்பள விவகாரத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya ) தொடர்ந்தும் பொய்களையே கூறிக் கொண்டிருக்கின்றார் என முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க (Sagala Ratnayaka)  தெரிவித்துள்ளார்.

பிரதமராக பொறுப்பான பதவியிலிருந்து கொண்டு பொய் கூறிக் கொண்டிருப்பவரை நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்ய வேண்டுமா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் நேற்றைய தினம் 31, இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு : ரணில்,அநுரவிற்கு நாமல் சாட்டையடி

அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு : ரணில்,அநுரவிற்கு நாமல் சாட்டையடி

சம்பள விவகாரம்

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ''தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு தொடர்பில் பின்பற்றும் கொள்கை என்ன என்பது தொடர்பில் தெளிவற்ற நிலைமையே காணப்படுகிறது.

அரச ஊழியர்களின் சம்பள விவகாரத்தில் பொய்யுரைக்கும் ஹரிணி: குற்றஞ்சாட்டும் சாகல ரத்நாயக்க | Govt Salary Issue Increase Pm False Claims Exposed

ஒரு சந்தர்ப்பத்தில் அரசாங்கம் சர்வதேசத்துக்கு உரையாற்றிய போது அந்த ஒப்பந்தத்தை அவ்வாறே நடைமுறைப்படுத்துவதாகக் கூறியது. நாணய நிதியக் குழு நாட்டுக்கு வருகை தந்த போதும், அமெரிக்காவில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான வழக்கொன்றின் போதும் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

ஆனால் தெளிவாக இதுதான் எம்முடைய கொள்கை என்று அரசாங்கம் குறிப்பிடவில்லை. மறுபுறம் அரச உத்தியோகத்தர்களின் சம்பள விவகாரத்திலும் அரசாங்கம் இவ்வாறான குழப்பத்திலேயே பயணித்துக் கொண்டிருக்கிறது.

திருடர்களை பிடிக்க ஆர்வம் காட்டாத அநுர அரசு: காரணத்தை வெளியிட்ட பிரதமர் ஹரிணி

திருடர்களை பிடிக்க ஆர்வம் காட்டாத அநுர அரசு: காரணத்தை வெளியிட்ட பிரதமர் ஹரிணி

 பொருளாதார வளர்ச்சி வேகம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கேள்விகளுக்கு பதிலளிக்காத ஜனாதிபதி, தற்போது பிரதமரை அதற்காக முன்னிலைப்படுத்தியுள்ளார். 2024 இல் நாம் எதிர்பார்த்ததை விட பொருளாதார வளர்ச்சி வேகம் அதிகமாகவே காணப்பட்டது.

அரச ஊழியர்களின் சம்பள விவகாரத்தில் பொய்யுரைக்கும் ஹரிணி: குற்றஞ்சாட்டும் சாகல ரத்நாயக்க | Govt Salary Issue Increase Pm False Claims Exposed

அதற்கமைய அரச உத்தியோகத்தர்களுக்கு வாழ்க்கை செலவு கொடுப்பனவாக 10 000 ரூபா வழங்கப்பட்டது. எனினும் அந்த கொடுப்பனவு வழங்கப்பட்ட பின்னரும் ஆசிரியர் உள்ளிட்ட தொழிற்சங்கங்களால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அந்த ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் யார் இருந்தனர் என்பதையும் நாம் அறிவோம். எவ்வாறிருப்பினும் இதற்காக நியமிக்கப்பட்ட உதய ஆர் செனவிரத்ன குழுவின் அறிக்கைக்கமைய அடுத்த வருடம் முதல் அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை 24 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

2025 மற்றும் 2026 ஆகிய இரு வருடங்களில் இந்த அதிகரிப்பை வழங்குவதற்கு அந்த குழுவால் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. வரவு - செலவு திட்டத்தின் ஊடான இதனை நடைமுறைப்படுத்துவதற்கும் எமது அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.

யாரை நம்புவது என்ற கையறுநிலையில் ஈழத்தமிழர்களின் அரசியல் பரப்பு!

யாரை நம்புவது என்ற கையறுநிலையில் ஈழத்தமிழர்களின் அரசியல் பரப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் 

ஆனால் பிரதமர் ஹரிணி அமரசூரிய, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொய் கூறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பள விவகாரத்தில் பொய்யுரைக்கும் ஹரிணி: குற்றஞ்சாட்டும் சாகல ரத்நாயக்க | Govt Salary Issue Increase Pm False Claims Exposed

உண்மையில் தேசிய மக்கள் சக்தி பொய் கூறியுள்ளது. தேர்தலுக்கு முன்னர் 6 மாதங்களுக்கொருமுறை சம்பள அதிகரிப்பை வழங்குவதாகக் கூறிய ஜே.வி.பி. தற்போது அதனை முற்றாக மறுக்கிறது. அவ்வாறெனில் யார் தற்போது பொய்யுரைத்துள்ளது?

அரசியலில் எந்தளவு நெருக்கடிகளை எதிர்கொண்டாலும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒருபோதும் பொய் கூறி மக்களை ஏமாற்ற மாட்டார்." என்றார்.

எனினும் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 17 தடவைகள் மக்களால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) போன்ற ஒருவரின் ஆலோசனையை நான் ஒருபோதும் பெறமாட்டேன் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  

ReeCha
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024